Skip to main content

Posts

Showing posts from 2020

சிவபுராணம்

திருச்சிற்றம்பலம்  நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்து எல்லை இலாதானே நின...

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன் சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை! (திருப்பரங்குன்றத்தில்)

கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ...

கணபதி என்றிட கலங்கும் வல்வினை

கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலை தீருமே காக்கும் கடவுள் கணேசனை நினை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருள் துணை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருளே துணை காக்கும் கடவுள் கணேசனை நினை யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள் யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள் அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள் ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள் காக்கும் கடவுள் கணேசனை நினை நாதமும் போதமும் ஞானமும் ஆனவன் நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன் நாதமும் போதமும் ஞானமும் ஆனவன் நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன் ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன் உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்

கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா சக்தியின் மைந்தா சரணம் கணேஷா சங்கட நாசனா சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா சம்பு குமாரா சரணம் கணேஷா சண்முகன் சோதரா சரணம் கணேஷா விக்ன விநாயகா சரணம் கணேஷா  வேழ முகத்தோனே சரணம் கணேஷா பார்வதி பாலனே சரணம் கணேஷா பக்தர்க்கு அருள்வாய் சரணம் கணேஷா  ஐந்து கரத்தோனே சரணம் கணேஷா அடியார்க்கு அருள்வாய் சரணம் கணேஷா பானை வயிற்றோனே சரணம் கணேஷா பாதம் பணிந்தோம் சரணம் கணேஷா மூஷிக வாகனா சரணம் கணேஷா முன்னின்று காப்பாய் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா